பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக மாண்புமிகு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திரு.தீரஜ் குமார் IAS., திரு.கோதண்டராமன், தலைமை பொறியாளர் (மெட்ரோ), திரு. சந்திரசேகர், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மற்றும் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.