வரைபடங்களைக் காண இங்கு கிளிக் செய்க
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில், பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் சாலையின் ஓடுதள மேம்பாடு, பாலங்கள், சிறு பாலங்கள் கட்டுதல், புறவழிச் சாலைகள் அமைத்தல் மற்றும் மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வலகில் தலைமைப்பொறியாளரின் கீழ் இயங்கும் 9 வட்டங்கள் மற்றும் 44 கோட்டங்கள் மூலம் மொத்தம் 63,950 கி.மீ. நீளச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வலகின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு: :- மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், கரும்பு அபிவிருத்தி சாலைகள், பாலங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு.
- பருவ மழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் சேதமுற்ற சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைத்தல்
- சாலைகளை அகலப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல்
- புதிய பாலங்கள் கட்டுதல் மற்றும் பழைய பாலத்திற்கு பதில் புதிய பாலங்கள் மறு கட்டுமைத்தல்
- புதிய புற வழிச் சாலைகள் அமைத்தல்
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு ;
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்:நெடுஞ்சாலைத்துறையின் கீழ் 63,950 கி.மீ. நீளமுடைய மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் ஆகிய சாலைகள் உள்ளன. போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாலை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2005-06 ஆம் ஆண்டு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. சாலைகளில் தேவைப்படும் சேவை நிலைகளை அடையும் வகையில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள், உறுதிப்படுத்துதல் / மேம்படுத்தும் பணிகள் சிறு பாலங்கள், பாலங்கள் / பெரிய பாலங்கள், பாதுகாப்பு பணிகள் இவையாவும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 5 வருடங்களில் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள சாலைகளில் 21357 கி.மீ. நீளத்திற்கு அகலப்படுத்துதல் / மேம்படுத்துதல் / உறுதிபடுத்துதல் ஆகிய பணிகள் மற்றும் 2263 ணிக்கையிலான சிறு பாலங்கள் / பாலங்கள் / பாதுகாப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்தில் பாதுகாப்பு பணிகளான தாங்குசுவர் கட்டும் பணி, மையத்தடுப்பான் அமைத்தல், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வடிவியல் மேம்பாட்டு பணிகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014 - 15 முதல் ரூ. 1829.44 கோடி மதிப்பில் சாலைகளில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புறவழிச் சாலைகள்வ. எண் | நிறைவுற்ற பணிகள் | முன்னேற்றத்தில் உள்ள பணிகள் | நிலம் கை`யகப்படுத்தும் பணி முன்னேற்றத்தில் உள்ள புறவழிச்சாலைப் பணிகள் | விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ள பணிகள்o | அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ள பணிகள் | |||||
1 | பெரம்பலூர் கட்டம் -1, | இலுப்பூர் | திருவாரூர் | குன்னூர் | பார்த்திபனூர் | |||||
2 | செய்யாறு | இராசிபுரம் (கட்டம் -I, பகுதி -II) | ஆத்தூர் | கூடலூர் | - | |||||
3 | வந்தவாசி | திருத்தணி | பெரியப்பாளையம் | ஆர்.கே.பேட்டை | - | |||||
4 | ராசிபுரம்(கட்டம்1, பகுதி 1), | - | மன்னார்குடி வட்டச்சாலை | பள்ளிக்கொண்டா | - | |||||
5 | எடப்பாடி | - | பாப்பாரப்பட்டி | மணச்சநல்லூர் கட்டம் -11 | - | |||||
6 | ஓசூர் உள் வட்ட சாலை | - | சிவகாசி வட்டச்சாலை | மணப்பாறை | - | |||||
7 | இளையான்குடி | - | கரூர் வட்டச்சாலை | திருத்துறைப்பூண்டி கட்டம் II | - | |||||
8 | எட்டுகுடி | - | கும்பகோணம் (கட்டம் III) | நன்னிலம் | - | |||||
9 | துறையூர் | - | வலங்கைமான் | அரியலூர் கட்டம் II | - | |||||
10 | தாராபுரம் கட்டம் -1 | - | மேட்டுப்பாளையம் | சோழிங்கூர் | - | |||||
11 | தாராபுரம் கட்டம் -2 | - | கோயம்புத்தூர் மேற்கு வட்டச்சாலை | அறந்தாங்கி | - | |||||
12 | தஞ்சாவூர் கட்டம்- II | - | வேலூர் வட்டச்சாலை (கட்டம் I) | திருச்சி அரைவட்டச் சாலை | - | |||||
13 | பட்டுகோட்டை கட்டம் -1, | - | ஓசூர் வெளி வட்டச்சாலை | ஆலங்குடி | - | |||||
14 | பொள்ளாச்சி கிழக்கு புறவழிச்சாலை | - | திண்டுக்கல் | மயிலாடுதுறை | - | |||||
15 | தார மங்கலம் புறவழிச்சாலை | - | திருக்காட்டுப்பள்ளி | முசிறி | - | |||||
16 | மணச்சநல்லூர் கட்டம் -1 | - | - | வெள்ளக்கோவில் | - | |||||
17 | - | - | - | திருப்பூர் | - | |||||
18 | - | - | - | காங்கேயம் | - | |||||
19 | - | - | - | பெண்ணாடம் | - | |||||
20 | - | - | - | செந்துறை | - | |||||
21 | - | - | - | செங்கம் | - | |||||
22 | - | - | - | மேல் கச்சிராப்பட்டு- கீழ் கச்சிராப்பட்டு | - |
திருத்தணி, இலுப்புர் மற்றும் இராசிபுரம் ஆகிய புறவழிச் சாலைப்பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. சிவகங்கை, கமுதி, பார்த்திபனூர் மற்றும் உத்திரமேரூர் புறவழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணிகள்
தங்கு தடையில்லாத போக்குவரத்தை நிர்வகிப்பதில் உரிய நேரத்திலான சாலைகளின் பராமரிப்பு முக்கிய பங்காற்றுகின்றன. உரிய நேரத்திலான சாலைகளின் பராமரிப்பு அதன் அதன் ஆயுட்காலத்தை கூட்டுவதோடு மட்டும் இல்லாமல் சாலைகளை நிர்மாணிப்பதில் பெரும் செலவை குறைக்கிறது.
பாலங்களின் பராமரிப்பு, மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை எளிதாக வடிந்து செல்ல வழி செய்வதுடன் சாலை ஓடுதளத்திற்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கின்றது.
இந்திய சாலைகள் குழுமத்தின் வழி காட்டுதலின் படியும், இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞசாலை சாலை அமைச்சகத்தின் விவரக் குறிப்பின் படியும் பராமரிப்பு நிதியை பயன் படுத்தி சாலைகளில் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
சாலை பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய - பசிபிக் பிராந்திய சமூக மற்றும் பொருளதார ஆணையகத்தின் ஆய்வில், இந்தியாவில் நிகழும் சாலை விபத்துக்களால் மொத்த உற்பத்தியில் 3 விழுக்காடு அளவிற்கு பண இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை நிகர மதிப்பீட்டில் 58,000 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். தமிழ்நாட்டில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவு பணியிழப்பு, உற்பத்தி, வருமானம், விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பநிலை, உடல் மற்றும் மனரீதியாகவும் அடையும் துன்பம், பொருட்சேதம் ஆகியவற்றை பணமதிப்பீட்டில் கணக்கிடும் போது தமிழகத்திற்கு ரூ.22,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் 2020க்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை பாதியாக குறைப்பதற்கு உறுதி பூணப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பில் வளர்ச்சி திட்டகுறுக்கீடுகளுக்கும் அதற்கான முதலீடுகளுக்கும் விபத்து குறித்த ஆதாரங்கள் மிக அவசியமாகிறது. பாதுகாப்பான நகரங்களையும், போக்குவரத்து அமைப்புகளையும் உருவாக்குவதில் அனைத்து தரப்பு பயன்பாட்டாளர்களுக்கும் பொறுப்புள்ளது.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், போக்குவரத்து வரைமுறைப்படுத்துதல் மற்றும் அமலாக்கம் ஆகியவை சாலை பாதுகாப்பை மேம்படுத்தும். நெடுஞ்சாலைத்துறை பாதுகாப்பான சாலைகளை மக்களுக்கு வழங்க தொடர் முயற்சி எடுத்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை திறனான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அமைப்பினை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் தலையிட்டு, மூன்று நபர் சாலை பாதுகாப்பு குழுமத்தை ஏற்படுத்தி, விபத்துகள் குறித்து கூர்ந்தாய்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. இக்குழுவானது பல்வேறு அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறது.
இதே போன்று உலக வங்கி நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - II-ன் கீழ் நிறுவன திறன் மேம்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு கூற்றின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அமைப்புகளான சாலைப்பாதுகாப்பு நிர்வாக தலைமைக்குழு, சாலை பாதுகாப்பு மேலாண்மைக்குழு ஆகியன இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
சாலை பாதுகாப்புடன் கூடிய திட்டம் உருவாக்குதல் இன்றியமையாததாகும். விபத்துகளால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை கண்டறிவதற்கு சாலை தணிக்கை முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் விபத்து நிகழக்கூடிய இடங்களை சீரமைக்கும் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சாலை வடிவியல் அமைப்பினை மேம்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு பணிகளுக்காக 2014-15 முதல் 2020-21 வரை ரூ.1829.44 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தவிர, சாலை பாதுகாப்பு நிதியில் ரூ.850 கோடி மதிப்பிலான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சாலை பாதுகாப்புப்பணிகள்
(ரூ.கோடியில்)
------------------
வ. எண் |
ஆண்டு |
நிதி ஒதுக்கீடு விவரங்கள் |
||
|
|
சி.ஆர்.ஐ.டி.பி |
சாலை பாதுகாப்பு நிதி |
மொத்தம் |
1. |
2014-2015 |
250.00 |
200.00 |
450.00 |
2. |
2015-2016 |
206.87 |
100.00 |
306.87 |
3. |
2016-2017 |
203.07 |
100.00 |
303.07 |
4. |
2017-2018 |
200.15 |
100.00 |
300.15 |
5. |
2018-2019 |
292.10 |
0.00 |
292.10 |
6. |
2019-20 |
319.00 |
100.00 |
419.00 |
7. |
2020-21 |
342.28 |
150.00 |
492.28 |
மொத்தம் |
1829.44 |
850.00 |
2679.44 |
சாலைப் பாதுகாப்பு நிதியின் கீழ் 2014-15 முதல் 2020-21 வரை 6623 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 4372 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
அனைத்து துறை பயன்பாட்டாளர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளாலும், தரமான சாலை கட்டமைப்பை வழங்குவதில் துறையின் முன்னோடி முயற்சிகளாலும், மாநிலத்தில் விபத்துகளால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் முந்தைய வருடங்களை காட்டிலும் 24 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரின் கூட்டு முயற்சியாலும், ஒருங்கிணைந்த நடவடிக்கையாலும் இனிவரும் காலங்களிலும் தொடரும்.
கரும் புள்ளிகள்
ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் ஏற்படுவதையும், அபாயகரமான விபத்துக்களைக் குறைப்பதற்கான மேம்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு கருப்பு புள்ளிகள் அடையாளம் காணப்படுகின்றன. அதன்படி 2013 முதல் 2019 வரை நிகழ்ந்த அபாயகரமான விபத்துகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி மேம்படுத்தப்பட்டுள்ளது:
கரும் புள்ளிகளின் நிலை
-----
வ. எண் |
ஆண்டு |
அடையாளம் காணப்பட்ட கரும் புள்ளிகள் |
மேம்படுத்தப்பட்ட கரும் புள்ளிகள் |
செயலாக்கத்தில் உள்ளவை |
எடுத்து கொள்ளப்ப -ட உள்ளவை |
1 |
2013-14 |
169 |
169 |
- |
- |
2 |
2014-15 |
85 |
85 |
- |
- |
3 |
2016 |
64 |
64 |
- |
- |
4 |
2017 |
44 |
28 |
- |
- |
5 |
2018-19 |
413 |
116 |
237 |
60* |
775 |
478 |
237 |
60 |
*சி.ஆர்.ஐ.டி.பி. 2021-22 மற்றும் சாலை பாதுகார்பு நிதி 2021-22 திட்டத்தின் கீழ் கரும்புள்ளியை நிரந்தர திருத்தம் செய்ய எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் பணிகள்
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் கீழ்கண்ட பணிகள் செயலாக்கத்தில் உள்ளன:
- 2021-22 ஆம் நிதியாண்டில் நிலுவை பணிகளான 174.185கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல், 726 பாலங்கள் /சிறுபாலங்கள் /பாதுகாப்பு பணிகள் ஆகியவை ரூ.735.66கோடி மதிப்பில் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.
- 2021-22 ஆம் நிதியாண்டில் நிலுவை பணிகளான 629.27கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல், 540 பாலங்கள் /சிறுபாலங்கள் /பாதுகாப்பு பணிகள் ஆகியவை ரூ.596.56கோடி மதிப்பில் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.
- 2021-22 ஆம் நிதியாண்டில் நிலுவை பணிகளான 1274.27கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல், 1170 பாலங்கள் /சிறுபாலங்கள் /பாதுகாப்பு பணிகள் ஆகியவை ரூ.1657.93கோடி மதிப்பில் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.
- 2021-22 ஆம் நிதியாண்டில் நிலுவை பணிகளான 167.39கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல், 8 பாலங்கள் /சிறுபாலங்கள் /பாதுகாப்பு பணிகள் ஆகியவை ரூ.190.74 கோடி மதிப்பில் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.
- 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.715.30 கோடி செலவில், 4405 கி.மீ. சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மூலம் கீழ்கண்ட பணிகள் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது
1. மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் 2200கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதி வாரியாக தரம் உயர்த்தல்
- நடப்பு நிதியாண்டில் (2021-22), 255.02கி.மீ நீளம் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
2. தாலூக்கா தலைமையிடத்தை இணைக்கும் 6700கி.மீ நீளமுள்ள ஒரு வழி மற்றும் இடை வழித்தட சாலைகளை இருவழித்தட சாலைகளாக பகுதிவாரியாக தரம் உயர்த்தல்
- நடப்பு நிதி ஆண்டில் (2021-22), 639.10 கி.மீ நீளம் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
3. 1281 தரைப்பாலங்கள் மற்றும் இணைப்பு பாலம் இல்லா இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டுதல்.
- நடப்பு நிதிஆண்டில் 648தரைப்பாலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
4. நகராட்சி பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மாநில நெடுஞ்சாலைகளில் புறவழிச்சாலைகள் அமைத்தல்.